Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரபல ஜவுளி நிறுவனத்தை திறக்கக்கோரி பெண்பணியாளர்கள் ஆட்சியரிடம் முறையீடு

அக்டோபர் 06, 2020 06:27

தூத்துக்குடி: ''தூத்துக்குடியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் சென்னை சில்க்ஸ் திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''  என அதில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

தூத்துக்குடியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி நிறுவனம் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டி உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நிறுவனத்தை பூட்டி சீல் வைத்ததனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகிறோம். தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்க உள்ள நிலையில்  பள்ளி கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.

துாத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்ப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜவுளி கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு துாத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் ஆட்சிரிடம் மனு அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்